திங்கள், 1 ஜூலை, 2024

ஞாயிறு, 30 ஜூன், 2024

உயிர் எழுத்துகள்

கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

ச வரிசை எழுத்துகள்

கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


Click to download 

க வரிசை எழுத்துகள்

கீழ் கண்ட இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யவும்

சனி, 22 ஜூலை, 2023

Shortcuts for Windows 10

 


 I found some information about shortcuts for Windows 10. Here are some of them:

  • Windows key + I: Open Settings app.
  • Windows key + E: Open File Explorer.
  • Windows key + A: Open Action Center.
  • Windows key + D: Display and hide the desktop.
  • Windows key + L: Lock device.
  • Ctrl + C: Copy selected items to clipboard.
  • Ctrl + V: Paste content from clipboard.
  • Ctrl + Z: Undo an action, including undelete files (limited).
  • Alt + Tab: Switch between open apps.
  • Alt + F4: Close active window. (If no active window is present, a shutdown box appears.)

திங்கள், 4 ஜூலை, 2022

SUPER BUG MOON 2022

2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன்—சூப்பர் பக் மூன்—ஜூலை 13 அன்று நம் வானத்தை அலங்கரிக்கும்.

ஜூலை மாதத்தில் வரும் பக் மூன் ஒரு சூப்பர் பௌர்ணமியாக இருக்கும் மற்றும் சாதாரண முழு நிலவை விட பெரிதாகவும் பிரகாசமாகவும் தோன்றும்.

ஜூலை 13, 2022 அன்று முழு நிலவு பக் மூன் என்று அழைக்கப்படுகிறது , மேலும் அதன் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் இருப்பதால் , இது ஒரு சூப்பர் மூன் ஆகும் .

துல்லியமாக, முழு நிலவின் சரியான நேரம் 18:37 UTC . பௌர்ணமியின் தெரிவுநிலை நாம் இருக்கும் இடத்தில் சந்திரன் உதிக்கும் நேரத்தைப் பொறுத்தது .

செவ்வாய், 24 ஜூலை, 2018

Sight words for slow learners

Sight words

தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு கட்டாயம் காட்ட வேண்டிய காணொளி. Good touch and Bad touch.

நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் காணொளி.

School Morning Prayer Activities 24.07.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள்:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக்

கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

பழமொழி :

A pen is mightier than a sword

கத்தி முனையைவிட பேனா முனை வலிமை வாய்ந்தது

*பொன்மொழி:*

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.

- புத்தர்.

*இரண்டொழுக்க பண்பாடு :*

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?

பெரியார்

2.வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்?

காலா காந்தி

நீதிக்கதை :

ஆமையும் இரண்டு வாத்துகளும்
The Tortoise and the Ducks Story





அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம்.
ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, “ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள்”, என்று கேட்டது.

“பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏறி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம்”, என்று வாத்துகள் கூறியது.

“என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்”, என்றது ஆமை.

“உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்?” என்றது வாத்து.

அதற்கு ஆமை ஒர் உபாயம் செய்யலாம், “ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள்”, என்றது ஆமை

“நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய்” என்று வாத்துகள் கூறியது.

அப்படியானால் “பறக்கும்போது நான் வாய் போசாமல் இருக்கின்றேன்” என்று ஆமை கூறியது.

இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன.

சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் “சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய்”, என்று கூறியது.

செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து சொல்வதப்பார்த்த மக்கள் வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது.

கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.

நீதி: வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள்.

இன்றைய செய்தி துளிகள் :

1.மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: கடலில் வீணாகப் போகிறது காவிரி நீர்...குடிநீருக்கும் பயன்படாத அவலம்

2.லாரி ஸ்டிரைக் 4வது நாளாக தொடர்கிறது: மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்பார்ப்பு

3.18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என தினகரன் தரப்பு வாதம்

4.பள்ளிகளில் 'எமிஸ்' பதிவு பணி: வரும் 31க்குள் முடிக்க உத்தரவு

5.சொந்த மண்ணில் சாதித்த இலங்கை...... டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது

🌹🌹🌹🌹🌹🌹🌹

உயிர் எழுத்துகள் (தனி எழுத்துகளாக)

கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Click to download