ஞாயிறு, 29 நவம்பர், 2015

NMMS exam announced:

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
NMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🎓 தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்
🎓SC / ST மாணவர்கள் 7ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற மாணவர்கள் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்
🎓 30.11. 2015 to 11. 12. 2015க்குள் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்
🎓15. 12. 2015க்குள் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
🎓7. 12. 2015 to 19.12. 2015க்குள் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்
🎓 விண்ணப்பக் கட்டணம் ரூ.50
🎓 இணையதள முகவரி www.tndge.in

ஞாயிறு, 8 நவம்பர், 2015

முழுமையான நம்பிக்கை

       கடுமையான வறட்சியால் துன்பப்பட்ட கிராம மக்கள் ’முல்லா அவர்களிடம் சென்று மழைக்காக பிரார்த்தனை செய்ய சொல்வோம்’ என முடிவெடுத்து அவரிடம் சென்று மழைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
அவர்களின் கோரிக்கையை கேட்ட முல்லா கோபமாக “ என் பிரார்த்தனை மீது நம்பிக்கை இல்லாதவர்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்று நான் பிரார்த்தனை செய்யமாட்டேன்” என்று பதிலளித்தார்.
அதிர்ந்துபோன மக்கள், முல்லா அவர்களே உங்கள் பிரார்த்தனை மீது நம்பிக்கை வைத்துதானே இவ்வளவு தூரம் வந்து உங்களிடம் பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை வைக்கிறோம். அப்படி இருக்க உங்கள் பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று வீணாக பழிசுமத்துகிறீர்களே இது என்ன நியாயம்” என்றனர் கிராம மக்கள்.
“ நீங்கள் பொய் சொல்கிறீர்கள் ! உண்மையிலேயே என் பிரார்த்தனை மீது நம்பிக்கை உள்ளவர்களானால் நீங்கள் வரும் போது குடையுடன் அல்லவா வந்திருக்க வேண்டும் ? “ என்றார் கூலாக முல்லா.

தெரிந்த பெயர் தெரியாத விபரம் !

ஜெராக்ஸ் 

    இந்த வார்த்தையை கேள்விப்படாதவர்கள் இக்காலத்தில் இருப்பது அபூர்வம் ! புகைப்பட நகல் (Photo copy) என்ற அர்த்ததில் தான்  இந்த  வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது ! ஆனால் உண்மையில் அது புகைப்பட நகல் (Photo copy) மிஷின் தயாரிக்கும் கம்பெனியின் பெயர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?  என்வே இம்முறை,  ஜெராக்ஸ், ஸாரி ! புகைபட நகல் எடுக்க செல்லும் போது ஜெராக்ஸ் என்று கூறாமல் Photo copy  என்றே கூறுங்கள் !

கான்வெண்ட் என்பது கன்னியாஸ்திரீகள் வசிக்கும் இடம்:

    பல ஆங்கில பள்ளிப்பெயர்கள்  ’……………கான்வெண்ட்’  என்று பெயரிடப்பட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள் ! ’கான்வெண்ட்’ என்ற சொல்லுக்கு கன்னியா ஸ்த்ரீகள் வசிக்கும் இடம் என்பது பொருளாகும். பெரும்பாலான ஆங்கில கல்விகூடங்கள் அவர்களால், அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே நடத்தப்பட்டதால் அப்பெயர் வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், சாதாரண பிரஜைகளால் நடத்தப்படும் ஆங்கிலப்பள்ளிக்கும் அப்பெயரை இட்டு தங்கள் ’ஆங்கில அறிவை ‘ பறைசாற்றிக் கொள்பவர்கள் பற்றி என்ன சொல்ல !?

கணித வித்தை

         தோ ஒரு கணித வித்தை ! இதை எப்படி செய்ய முடிகிறது என்பதை உங்களால் விளக்க இயலுமா ?
இதை உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் செய்து மகிழலாம்.
உங்கள் நண்பர்கள் யாரேனும் ஒருவரை ஒரு துண்டு காகிதத்தை எடுத்து மூன்று இலக்க எண்ணை எழுதச்சொல்லுங்கள்.  அந்த எண் எவ்வகையிலும் இருக்கலாம். அதாவது பூஜ்யங்கள் போன்றவற்றுடன் இருக்கலாம். அந்த எண்ணை உங்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
அதை அப்படியே அடுத்த நபருக்கு கொடுக்க சொல்லி அவரை அந்த மூன்று இலக்கத்து அருகில் அதே மூன்று இலக்க எண்களை எழுதச்சொல்லவும். அது இப்போது ஆறு இலக்க எண்ணாக இருக்கும்.
அதாவது உதரணத்திற்கு முதல் நபர் எழுதியது 308 என்றால்  308308
அந்த ஆறு இலக்க எண்ணை ஏழால் வகுக்க சொல்லுங்கள்.  ஏழால் வகுபடும் எண்கள் மிகக்குறைவு இந்த எண் ஏழால் மீதமின்றி  வகுபடுமா என்ற சந்தேகம் வேண்டாம்!  அந்த எண்கள் கண்டிப்பாக ஏழால் மீதமின்றி வகுபடும்.
வகுத்ததால் வந்த ஈவை மட்டும் வேறொரு காகிதத்தில் எழுதி வேறு யாருக்கும் தெரியாமல் மற்றொரு நபருக்கு கொடுக்கச்சொல்லவும்.
அந்த நபரை கொடுத்த அந்த எண்களை பதினொன்றால் வகுக்கச்சொல்லுங்கள். (மீதியில்லாமல் வரும்!)
வரும் விடையை வேறொரு காகிதத்தில் எழுதி மடித்து மற்றொரு நபரிடம் கொடுக்கச்சொல்லுங்கள் ! அவரை அவ்வெண்ணகளை பதிமூன்றால் வகுக்க்ச்சொல்லுங்கள் !(கவலைப்படாதீர்கள் இதுவும் மீதிமில்லாமல் வகுபடும் !)
வரும் விடையை வேறொரு காகிதத்தில் எழுதி மடித்ததை நீங்கள் வாங்கி முதன்முதலில் மூன்று இலக்கம் எழுதினாரே அவரிடம் கொடுங்கள் !
அவர் முதலில் எந்த மூன்று இலக்க எண்களை எழுதினாரோ அந்த எண்கள் அவர் கைகளில் இருக்கும் !?
இது நிகழ்ந்தது எப்படி ?
மாதிரி:
  1. மூன்று இலக்க எண்: 234
  2. ஆறு இலக்கமாக:   234234
  3. அதை 7 ஆல் வகுக்க: 234234 /7 =
  4. அதன் ஈவு: 33462
  5. அதை 11 ஆல் வகுக்க: 33462 / 11
  6. வரும் ஈவு : 3042
  7. அதை 13 ஆல் வகுக்க 3042 / 13
  8. வரும் ஈவு: 234 !  ஆரம்பத்தில் எழுதிய மூன்றிலக்க எண் !

ஞாயிறு, 1 நவம்பர், 2015

மூங்கில் இயற்கை கொடுத்த வரம்

மூங்கில் மரங்கள் அதிகமான
சுவாசக்காற்றைத்தருகின்றன....
ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்
ளனர்.

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு
தேவைப்படுவது 800 கிராம் எனக்
கணக்கிட்டுள்ளது.

ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம் ஆக்சிஜனை வெளியிடுகிறது அதனால் மூங்கில் மரம்
வளர்த்தால் அதிகமான ஆக்ஸிஜனைப் பெறலாம்.

சனி, 31 அக்டோபர், 2015

டெங்கு பற்றி அறிவோம்!

டெங்கு காய்ச்சல்.

தோழர்களே உங்களுக்கு காய்ச்சலின் போது நீர்தாகம் அதிகமாக வருகிறதா?
தொண்டை வரண்டு போகிறதா?
இது டெங்குவின் அறிகுறி.

சட்டென்று பப்பாளி இ லையை பிடுங்கி அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து 4 வேளையாக பகிர்ந்து குடிக்கவும்.
டெங்கு வைரஸ் உடம்பில் உள்ள நீர்சத்தை அழித்துதான் மரணத்தை வரவைக்கிறது.

முடிந்த அளவு நீர், பழச்சாறுகள் அருந்துகள்.  சிறுநீரை அடிக்கடி கழியுங்கள்.
சர்க்கரை உப்பு கரைசலை இரண்டு மூன்று வேளை பருகுங்கள்.
  நிலவேம்பு பொடியை நீரில் கொதிக்க வைத்து பருகுங்கள்.

சாதாரன காய்ச்சல் என்று அஜாக்கிரதை கொள்ளாதீர்.
ஒரு கொசு ஒரு இரவில் 25 கிலோமீட்டர் வரை பயனிக்கும்.

டெங்குவை குணமாக்க மருத்துவத்தில் முழுமையான மருந்து இதுவரை இல்லை.  நான் சொன்ன முறையை பயன்படுத்துயங்கள். முழுமையாக குணமடையும்.

எந்த ஒரு நோய் குணமாகுவதிற்கு மனசுதான் காரணம். உங்கள் மனசை ஏமாற்றுங்கள், தைரியமாக இருங்கள்.

பாதிக்கபட்டவருக்கு தைரியம் சொல்லாதீர்கள். ஏனென்றால் நீங்கள் தைரியம் சொல்லும்போது அவர்களுக்கு அதிக பயத்தை உண்டுபன்னும். மாறாக அவருக்கு பிடித்தமான விஷயங்களை உரையாடுங்கள்.

உங்கள் வீட்டில் இருப்பு பொருட்கள், சமையலறை, பயன்படுத்தாத பாத்திரங்களில் இவ்வகை கொசு இருக்கலாம்.  இதை அழிக்க விளம்பரங்களில் வரும் கொசு அழிப்பான் வேண்டவே வேண்டாம்.
  தீக்கனியின் மீது பச்சையான வேப்பிலை போட்டு உங்கள் வீடு முழுவதும் புகை காட்டுங்கள். (சாம்பிரானி புகை காட்டுவது பொல்)
கொசு முற்றிலுமாக அழிவதுடன் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா வைரஸ் உம் முற்றிலும் அழித்து விடும்.

அருகிலிருப்பவரிடம் எடுத்துரையுங்கள்.
உங்களால் ஒரு உயிர் முதல் பல உயிர் வரை காப்பாற்ற படலாம்.

சனி, 24 அக்டோபர், 2015

SABL & ALM TIME TABLE

SABL & ALM TIME TABLE

SABL TIME TABLE
8.50-9.10 CLEANING
9.10-9 .30 PRAYER
9.30-9.35 MEDITATION
9.35-12.10 SUBJECT 1 
12.10-12.40 VALUE EDUCATION, YOGA ETC 
12.40-1.15 LUNCH
1.15-1.45 DICTATION, TV PROGRAMMES, ACTIVITIES etc.

1.45-3.50 SUBJECT 2
3.50-4.10 COMPUTER, GAMES etc.
4.10 CLASSROOM PRAYER.
(FRIDAY 3.10-4.10 CULTURALS
20MIN PRAYER ONLY ON MONDAY OTHER DAYS 15MIN PRAYER)
ALM  Time table
8.50-9.10  CLEANING
9.10-9 .25 PRAYER
9.25-9.30 MEDITATION
9.30-11.00 SUBJECT1
11.00-12.30 PERIOD  2
12.30-12.40 YOGA
12.40-1.15 LUNCH
1.15-1.45 ACTIVITIES
1.45-3.15 PERIOD 3
3.15-4.00  PERIOD 4
4.00-4.10 EVENING ACTIVITIES.
(FRIDAY 3.10-4.10 CULTURALS
 20MIN PRAYER ONLY ON MONDAY OTHER DAYS 15MIN PRAYER)

அறிவியல் கருவிகள்!

🎯🎯🎯🎯🎯🎯🎯

அறிவியல் கருவிகள்

1. வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்
2. கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக
அளக்க - குரோனோ மீட்டர்
3. நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்
4. வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்
5. மனித உடலின் உள் உறுப்புகளை காண -
எண்டோஸ்கோப்
6. கடல் மட்டத்திலிருந்து உயரம் காண - ஆல்டி
மீட்டர்
7.உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர்
8. மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர்
9. காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர்
10. வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர்
11. நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்
12. திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய -
ஹைட்ரோ மீட்டர்
13. பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர்
14. சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோ
மீட்டர்
15. பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்
16. ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது -
ஸ்டிரியோ ஸ்கோப்
17. செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப்
18. காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர்
19. காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர்
20. நிறமாலைமானி - ஸ்பெக்ட்ராஸ்கோப்
21. முட்டை குஞ்சு பொறிக்க - இன்குபேட்டர்
22. நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப்
ட்ராங்கோ
23. கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால்
கோடு
24. மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான்
நுண்ணோக்கி
25. மாலிமிகள் திசை அறிய - காம்பஸ்
26. இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத்
தொலைவுகளை அளக்க - செக்ஸ்டாண்ட்
27. தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும்
தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி
- டெலி பிரிண்டர்
28. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர்
(LASER )
29. எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADER)
30. இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro
Cardio Gram)
31. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க,
பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண
- ஸ்டெத்தாஸ்கோப்
32. மழையளவை அளக்க - ரெயின் காஜ்
33. இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம்
காண - ஸ்டெத்தாஸ்கோப்
34. நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க -
மைக்ரோஸ்கோப்
35. தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க -
பைனாகுலர், டெலஸ்கோப்
36. சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட்
லெவல்
37. காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்
38. இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய
- ஹிமோசைட்டோ மீட்டர்
39. நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட -
கானாங்கின் போட்டோ மீட்டர்
40. ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ
மீட்டர்
41. மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி -
ஸ்பெக்ட்ரோஸ்கோப்
42. கோளக வடிவப் பொருட்களின் வளைவினை
அளக்க -ஸ்பியரோ மீட்டர்
43. மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை
அறிய - பைரோ மீட்டர்
44. உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோ
மீட்டர்
45. திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும்
கருவி - பைக்கோமீட்டர்
46. படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ
மீட்டர்
47. ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை
அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்
48. ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்
49. நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்
50. சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க -
கால்வனா மீட்டர்
51. மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட்
மீட்டர்
52. கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்
53. விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ
மீட்டர்
54. கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்
55. இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ
மீட்டர

வெள்ளி, 23 அக்டோபர், 2015

தும்மல் வந்தால்!

தும்மல் வந்தால் அதற்கு வைத்தியம் உங்கள் சுண்டு விரல்தான்..!
நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்
கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல்.
மூச்சுக்குழல், நுரையீரல், மார்பில் தேவை இல்லாத பொருட்கள் (தூசிகள், துகள்கள்) நுழைந்தாலோ, சேர்ந்தாலோ ஊடுருவாமல் தடுக்க மார்பு மற்றும் தொண்டை தசைகள் சுருங்கி வாய் வழியாக தும்மல் மூலமாக அவைகள் வெளியேற்றப்படுகின்றன.
நுரையீரலில் இருந்து வெளிப்படும் நாம் போடும் (தும்மல்) காற்று சுமார் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் வெளிப்படும் .
உள்ளே நுழைந்த தூசிகள், துகள்கள், கிருமிகள் எல்லாம் அந்த காற்றோடு சேர்ந்து வெளியேற்றப்படும். ஆகவே தும்மலை அடக்கக் கூடாது.
ஆனால் அதே சமயத்தில் ஒரு மீட்டிங், திருமணம், ஹோட்டலில் இருந்தாலோ, கைகுழைந்தைகள் அல்லது அதிக நோயினால் பாதிக்கப்படவரை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தாலோ சிலர் தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுவர்...
அம்மாதிரி நேரங்களில் தும்மலை அடக்க நாம் இடதுகை சுண்டுவிரலை வலது கையால் பிடித்து பின்பக்கமாக இழுக்கவும்.(கோலி அடிப்பதுபோல) அப்படி இழுக்கும்போது தும்மல் பத்து, இருபது வினாடிக்குள் கட்டுக்குள் வரும்.
ஆனால் இந்த முறையை அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது.
ஏனென்றால் நம் உடலில் இருக்கவே கூடாத கழிவுகளை வெளியில் தள்ள நாம் உடலே முயற்சிக்கும் போது அதை தடுத்து நிறுத்தி, நம் உடலை நாமே கெடுத்துக் கொள்ள கூடாது.
அதிகமாக தும்முகிறவர்கள் தும்மலின் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து மருந்துகள், மாத்திரைகள் துணையின்றி சரி செய்துக் கொள்ள வேண்டும்.
சுண்டுவிரல்தானே அதால என்ன செய்யமுடியும்னு நினைக்காதீங்க.. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெருசுங்க.... காசா.. பணமா..... முயற்சித்துதான் பாருங்களேன

MY HIKOO

பூமீயைத் தாண்டி கல் எறிய
ஆரம்பித்து விட்டேன்!

எதற்கும் பாதுகாப்பாக இருங்கள்!
உங்கள் மீதும் நட்சத்திரங்கள் விழலாம்!

சனி, 17 அக்டோபர், 2015

என் முயற்சி!

வேட்கை --
புத்துலகை நீபடைக் க
புதுநூலை நீகற் க!
புத்தகத்தை ஆராயகத் தினுள்ள்
புதுஅகத்தைக் காண்பாய் உன்னுள்!
செக்கென இருப்போன யும்
செழுமண்ணாய் ஆக்கிடு மே!
புதுநாவல் படித்திடு, படைத்திடு
இரவல் கேட்டிடுபிற மொழியிலும்!
புதுஅரிச் சுவடிஆக் கலாம்அப்துல்
கலாம் போல் ஆகலாம்!
வேட்கைகொள் புதுநூலில்! தரணி
இனிபுகழ் பாடும்தமி ழினில்!
பூபாலம் பாடும் வேளை
புது புரவி புறப்படும் நாளை!
© செளந்தர்.....

கொசு_கடிப்பதும்_தவிர்ப்பதும்‬..!

#‎கொசு_கடிப்பதும்_தவிர்ப்பதும்‬..!

* உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு.

* 2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.

* மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.

* ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.

* சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.

* கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்.

* ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே

* முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரியமுனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. கொசுவின் துணை உறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 

* உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று பெரும் பாலான நாடுகளில் அறிவிக்கப் பட்டதும் கொசு தான்.

* ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளிலேயே அது உணவுகொள்ளும். கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்
பெண் கொசுதான்.

* கடிக்கும்போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது. ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருளை செலுத்துகிறது. மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது.
' ஏடிஸ் ' வகை கொசுதான் டெங்கு பரப்புகிறது.

* ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும்போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது.
டெங்குவிற்கு மருந்தில்லை; டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.

* கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும். நுளம்பு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் நுளம்பினத்தின் பெண் நுளம்புகளே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்காவியாக இருக்கின்றது

* கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின்(alletrin) சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருள் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற உடல்நலக்கேடுகள்விளைகின்றன.

* உடலில் தேங்காய் எண்ணை பூசிக் கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில் பூச்சிகளும் நம்மை கடிக்காது.


* Vitamin B --- கொசுவின் எதிரி..., இந்த வைட்டமின் B அதிகமாக இருப்பவர்களை கொசு அண்டுவதில்லை...

* கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கும் காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ்கொசுக்களை கவருகின்றன ஆகா பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஷயத்திலும் உண்மையே

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

GENERAL KNOWLEDGE


1.தமிழகத்தில் மேலவை நீக்கப்பட்டபோது முதல்வராக இருந்தவர் - எம்.ஜி. ராமச்சந்திரன்


2.சென்னை சுதேசிச் சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1852


3. பகவத் கீதைக்கு தடை விதித்த நாடு - பாகிஸ்தான்


4.இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ரகம் - செட்டாக்

5. முற்காலத்தில் லெமூரியா கண்டம் என்றழைக்கப்பட்ட பகுதி - தமிழ்நாடு

6. மொரார்ஜி தேசாய் இந்தியப்பிரதமராகப் பதவி வகித்த பொழுது இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி - ஜிம்மி கார்ட்டர்

7.தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி உயிர்விட்ட தமிழர் - சங்கரலிங்கனார்

8. ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாடு - போர்ச்சுகல்

9. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பட குடியரசுத் தலைவர் ஆங்கிலோ-இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை நபர்களை லோக்சபை உறுப்பினர்களாக நியமிக்கலாம்  இரண்டு நபர்கள்

10.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அளுவலக மொழி - உருது

11.இந்தியாவின் பூலோக சொர்க்கம் எனப்படும் இடம் - காஷ்மீர் பள்ளத்தாக்கு

12.அரசியலமைப்பின் 356-வது பிரிவு பயன்படுத்தப்படாத மாநிலம் - அருணாச்சலப்பிரதேசம்

13.ஆளுநர் திடீ ரென்று இறக்க நேரிட்டால் ஆளுநர் பொறுப்பைக் கவனிப்பவர் - மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.

14.டச்சுக்காரர்களின் நிலையான குடியேற்றமாக விளங்கிய ஆசிய நாடு - இந்தோனேசியா

15. நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகத்தான் பிறக்க வேண்டும் என்று கூறியவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

16. புரட்சி ஞானி என்று குறிப்பிடப்படுபவர் - அரவிந்தர்

17.பத்து கோடி என்ற எண்ணைக் குறிப்பதற்கு தமிழில் உள்ள வார்த்தை - அற்புதம்

18. தஞ்சையில் கொண்டாடப்படும் சதயத் திருவிழா என்பது யாருடைய பிறந்த தினம் - இராஜராஜ சோழன்

19.ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று கூறும் ஷரத்து - ஷரத்து 214

20. தகவல் தொடர்பு என்னும் தலைப்பு எந்தப் பட்டியலில் உள்ளது - மத்தியப் பட்டியல்

21. ஒரு மாநிலத்தில் இயற்ப்படும் சட்டங்களில் மாநில ஆளுநரின் கையொப்பம் அவசியம் என்று கூறும் ஷரத்து - ஷரத்து 200

22. இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் பதவியிலிருந்து 1939-ல் மகாத்மா காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டு இராஜிநாமா செய்தவர் - நேதாஜி

23.ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அறிவியல் ஆண்டாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 2005

24.பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கிய நாடுகள் - இந்தியா, சீனா

சனி, 18 ஜூலை, 2015

குழந்தைகளுக்கான அறிவுக்கதை

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான், 
 அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான், உட்னே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான் அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “


பிச்சைக்காரன் “ அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்
அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டான் .


இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.


அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன் , மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்

புதன், 15 ஜூலை, 2015

காமராஜர் பிறந்த தின சிறப்பு பகிர்வு.

🔵இன்று காமராஜர் பிறந்த தினம்🔵

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
காமராஜர்: முக்கிய நிகழ்வுகள்

🌻🌻1903 ஜுலை 15: குமாரசாமி – சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

🌻🌻1907: தங்கை நாகம்மாள் பிறப்பு.

🌻🌻1908: திண்ணைப் பள்ளியிலும், ஏனாதி நாயனார் வித்தியாவிலும் கல்வி பயின்றார்.

🌻🌻1909: சத்திரிய வித்தியாசாலாவில் சேர்க்கப்பட்டார்.

🌻🌻1914: ஆறாம் வகுப்பு படித்துக் கொண்ருக்கும்போது பள்ளி செல்வத்தை நிறுத்திக்கொண்டார்.

🌻🌻1919: ஏப்ரல் மாதம் ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரசின் முழுநேர ஊழியரானார். இதே ஆண்டில் சத்தியமூர்த்தியை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.

🌻🌻1920: ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார்.

🌻🌻1923: மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்.

🌻🌻1927: சென்னையில் ‘கர்னல் நீல்’ சிலையை அகற்றும் போராட்டம் நடத்தஅண்ணல்காந்திஜிடம்அனுமதிபெற்றார். ஆனால் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே நீல் சிலை அகற்றப்பட்டது.

🌻🌻1926: மதுரைக்கு வருகைபுரிந்த சைமன் குழுவை எதிர்த்தார். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார்.

🌻🌻1936: காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி தலைவரானார். யுத்த நிதிக்குப் பணம் தரவேண்டாம் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்த்தால் அந்நிய அரசால் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறைக்கு அனுப்பட்டார்.

🌻🌻1941 மே – 31: சிறையிலிரிந்த காமராஜர் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🌻🌻1942-45:
ஆகஸ்டு புரட்சியின் காரணமாக சிறைவாசம் அனுபவித்தார்.

🌻🌻1946 மே 16: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்தலில் வெற்றிப்பெற்றார்.

🌻🌻1949-1953: இலங்கைக்குச் சுற்றுப்பயணம் சென்றார்.

🌻🌻1954 பிப்ரவரி: மலாய் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலமைச்சர் இராஜாஜி ராஜினாமா செய்தார். நிலைமையை சமாளிக்க சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குக் காமராஜர் போட்டியிட்டு வென்றார்.

🌻🌻1954 ஏப்ரல் – 13: தமிழக முதலமைச்சரானார். இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டிட்டு வென்றார்.

🌻🌻 1963 வரை முதலமைச்சராக இருந்தார்.

🌻🌻1961: சென்னையில் மாநகராட்சி உருவாக்கிய காமராஜர் சிலையை நேரு திறந்து வைத்தார்.

🌻🌻1963 அக்டோபர் – 2: காமராஜர் திட்டத்தின் படி (K Plan) பதவியை ராஜினாமா செய்தார்.

🌻🌻1964 – 67: அனைத்திந்திய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

🌻🌻1964 மே – 27: பிரதமர் நேரு மறைந்தார். சாஸ்திரியை பிரதமராக்கினார் காமராஜர்.

🌻🌻1966 : பிரதமர் சாஸ்திரி மறைந்தபோது இந்திரா காந்தி பிரதமர் ஆவதற்குத் துணை செய்தார்.

🌻🌻1966 ஜுலை 22: சோவியத் நாட்டில் இருபது நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

🌻🌻1967: பொதுத் தேர்தலில் காமராஜர் தோல்வியுற்றார். சி.என். அண்ணாதுரை முதல்வரானார்.

🌻🌻1969: நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

🌻🌻1975 அக்டோபர் – 2: காமராஜர் மறைந்தார்.

🌻🌻1976: மத்திய அரசு காமராஜர் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது. ‘பாரத ரத்னா விருது வழங்கியது.

🌻🌻1977: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காமராஜர் படம் குடுயரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியால் திறந்துவைக்கப்பட்டது

🌻🌻1978: சென்னை தியாகராய தகரில் காமராஜர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்கியது தமிழக அரசு. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.

🌻🌻1984 ஜீலை – 15: விருதுநகரைத் தலைமை இடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டம் உருவாகியது

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

செவ்வாய், 14 ஜூலை, 2015

பி.எப்.. கணக்கு விவரம் தமிழில் அறிய வழி.

💚💚💚💚💚💚💚💚💚

பி.எப்., கணக்கு விவரங்கள் இனி தமிழிலும் அறியலாம்!

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., சந்தாதாரர்கள், தங்களின் கணக்கு இருப்பு மற்றும் பிற தகவல்களை, தமிழில், எஸ்.எம்.எஸ்., மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தாம்பரம் பி.எப்., மண்டல
அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பி.எப்., சந்தாதாரர்களுக்கு, ஒருங்கிணைந்த நிரந்தர அடையாள எண் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, 'ஆன் - லைன்' மூலம், பி.எப்., கணக்கு விவரங்கள் மற்றும் பிற வசதிகளை பெற முடியும். சந்தாதாரர்கள், EPFOHO UAN TAM என, குறிப்பிட்டு, 77382 99899 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அவர்களின் பி.எப்., கணக்கு பற்றிய தகவல்கள், தமிழில், எஸ்.எம்.எஸ்., ஆக வரும். செயலற்ற கணக்குகளை முடிவுக்கு கொண்டு வரவும், பழைய கணக்கில் உள்ள தொகையை, புதிய கணக்கிற்கு மாற்றவும், உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பணிக்கு செல்வோருக்கு, மையப்படுத்திய உறுப்பினர் சான்று வழங்கப்படும்.
'ஆன் - லைன்' மூலம், சந்தாதாரர் கணக்குகளை மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் கணக்குகள், 'ஆன் - லைனில்' பதிவேற்றம் செய்யப்படுகிறது; 2014 - 15ல், 14.5 கோடி உறுப்பினர் கணக்குகள், பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதேபோல், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தையும், 'ஆன் - லைன்' மூலம் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

♻♻♻♻♻♻♻♻♻

உயிர் எழுத்துகள் (தனி எழுத்துகளாக)

கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Click to download