ஞாயிறு, 8 நவம்பர், 2015

முழுமையான நம்பிக்கை

       கடுமையான வறட்சியால் துன்பப்பட்ட கிராம மக்கள் ’முல்லா அவர்களிடம் சென்று மழைக்காக பிரார்த்தனை செய்ய சொல்வோம்’ என முடிவெடுத்து அவரிடம் சென்று மழைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
அவர்களின் கோரிக்கையை கேட்ட முல்லா கோபமாக “ என் பிரார்த்தனை மீது நம்பிக்கை இல்லாதவர்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்று நான் பிரார்த்தனை செய்யமாட்டேன்” என்று பதிலளித்தார்.
அதிர்ந்துபோன மக்கள், முல்லா அவர்களே உங்கள் பிரார்த்தனை மீது நம்பிக்கை வைத்துதானே இவ்வளவு தூரம் வந்து உங்களிடம் பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை வைக்கிறோம். அப்படி இருக்க உங்கள் பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று வீணாக பழிசுமத்துகிறீர்களே இது என்ன நியாயம்” என்றனர் கிராம மக்கள்.
“ நீங்கள் பொய் சொல்கிறீர்கள் ! உண்மையிலேயே என் பிரார்த்தனை மீது நம்பிக்கை உள்ளவர்களானால் நீங்கள் வரும் போது குடையுடன் அல்லவா வந்திருக்க வேண்டும் ? “ என்றார் கூலாக முல்லா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உயிர் எழுத்துகள் (தனி எழுத்துகளாக)

கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Click to download